ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிவந்த பேருந்து வயலுக்குள் கவிழ்ந்தது: பலர் காயம்
Sri Lanka Police Investigation
Accident
By Jaso
கஹதுடுவ-தியகம சாலையில் இன்று பிற்பகல் (25) ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையிலிருந்து விலகி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில்19 பேர் லேசான காயங்களுடன் தப்பியதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. சாலையில் மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, பேருந்து சாலையிலிருந்து விலகிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை
விபத்தில் காயமடைந்த 19 பேரில், 17 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரை களுபோவில போதனா மருத்துவமனையிலும், மற்றொருவரை வேதர மருத்துவமனையிலும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் யாருடைய உடல்நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்று காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி