பேருந்து கட்டணம் குறைக்கப்படுவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!
பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் மட்டுப்பாடு சட்டத்தை நீக்கினால் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த சட்டத்தை நீக்கினால், 34 ரூபாயாகவுள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம், 29 ரூபாயாக குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்கினால், 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பேருந்து கட்டணம் தொடர்பான கோரிக்கை
போக்குவரத்து அமைச்சு முன்வைத்த இந்த கோரிக்கைக்கு அமைய, இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தை நீக்குமாறு நான்கு சந்தர்ப்பங்களில் போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சிற்கு எழுத்துமூலம் அறியப்படுத்தி இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.