இலங்கையில் தொடரும் மர்ம மரணங்கள் - பிரபல வர்த்தகர் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்பு
பெலவத்தையில் அமைந்துள்ள கட்டடமொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 49 வயதுடைய ரொஷான் வன்னிநாயக என்ற வர்த்தகரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த 30ஆம் திகதியிலிருந்து உயிரிழந்த நபரைக் காணவில்லை என நேற்று (01) வெல்லம்பிட்டிய காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மர்மமான உயிரிழப்பு
மர்மமான உயிரிழப்பு தொடர்பில் மரண விசாரணைகளை நீதவான் முன்னெடுத்திருந்ததோடு, நுகேகொட சி.ஐ.டியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை நேற்றையதினமும் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள்வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விசாரணைகள் ஆரம்பம்
தலங்கம காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் ரொஷான் அனுருத்தவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.