புலமைப்பரிசில் பரீட்சை: பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
2026, ஓகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த விண்ணப்பங்கள் இன்று (30) முதல் ஏப்ரல் 30, நள்ளிரவு 12 மணி வரை கோரப்படும். விண்ணப்பங்களை ஏற்கும் கடைசித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள்
அரச பாடசாலையிலோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலையிலோ 5 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும்.

2027, ஜனவரி 31 ஆம் திகதி நிலவரப்படி 11 வயதுக்குட்பட்ட, குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்கான வழிமுறைகளை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.

சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த விரிவான வழிமுறைகள், அறிவுறுத்தல் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் தகவல் - 0112 784 537 / 0012 786 616 / 0112 784 208 / 0112 786 200 / 0112 784 201/ அவசர உதவி எண் - 1911 தொலைநகல் எண் - 0112 784 422 மின்னஞ்சல் முகவரி - http://gr5schexam@gmail.com
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 8 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்