தேசிய உரிமைகளை உறுதிப்படுத்த அணிதிரள்க!! பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
நீதிக்கான ஒன்றுகூடல்
தேசிய அடையாளங்களுக்கான உரிமையினை உறுதிப்படுத்த பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம், சமத்துவம், சகோதாரத்தும், எனும் உன்னத மானிடப் பண்புகளை பறைசாற்றி நிற்கும் பிரெஞ்சு தேசத்தில், ஈழத்தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களின் உரிமைகளை உறுதிப்படுத்த ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீதிக்காகவும், உரிமைக்காகவும் எழுக தமிழா எனும் முழக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலானது, எதிர்வரும் யூன் 22ஆம் நாள் புதன்கிழமை பரிஸ் République சதுக்கத்தில் மதியம் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தேசிய உரிமைகளை உறுதிப்படுத்த அணிதிரள்க
இதில், ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து தமது தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர பிதாக்கள் எனப் பல பிரெஞ்சு அரசியல் பிரமுகர்கள் பங்கெடுக்க இருக்கின்றனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்சு தேசம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்கான அரசியல் வெளியில், பிரான்சின் சட்டங்களுக்கு உட்பட்டு எமது செயற்பாடுகளை ஒன்றுபட்டு முன்னெடுப்பதானது, ஈழத் தமிழர்களை வலுவுள்ள சமூகமாக பிரான்சில் வெளிக்காட்ட முடியும் என்பதோடு, இந்தச் சமூக அங்கீகாரமே எமக்கான அரசியல் அங்கீகாரமாக மாறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.