கனடாவில் அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள்! இருவர் பலி - 6 காவல்துறையினர் படுகாயம்
கனடாவின் வங்கியொன்றினுள் மர்ம நபர்கள் புகுந்த நிலையில், இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் இருவர் அந்நாட்டு காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்க எல்லை அருகே உள்ள வான்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி செயற்பட்டு வருகிறது.
இந்த வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கியொன்றினுள் புகுந்த மர்ம நபர்கள்
இதுகுறித்து தகவல் அறிந்தது காவல்துறையினர் வங்கிக்கு விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்து, வங்கிக்குள் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
அப்போது 2 மர்ம நபர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மர்ம நபர்கள் 2 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மர்ம நபர்கள் சுட்டதில் 6 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே மர்ம நபர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அருகே வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
வாகனத்தை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டு
குறித்த இரண்டு நபர்கள் பற்றிய எந்த தகவலையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? அல்லது வேறு காரணமா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.