கனடாவில் பேரிடர்!! லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்ட நிலை
Ontario
Canada
By Vanan
கனடாவில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக 4 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயலுடன், இடி மின்னலோடு பலத்த மழையும் பெய்தது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வரிந்து விழுந்தன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
புயல், மழை காரணமாக 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.
மரண அறிவித்தல்