எரிபொருள் விலைக் குறைப்பு..! QR முறைமை நீக்கம் - வெளியான அறிவிப்பு
நாட்டில் கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றது
இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த போதே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் டி. ஜே. ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் எரிபொருள் விலை
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வேகத்திற்கு இணையாக விலை குறையவில்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மேலும் எந்தவித தடைகளும் இல்லை எனவும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்து வந்தபோதிலும், தற்போதைக்கு உள்நாட்டில் விலைகளை குறைக்கக் கூடிய சாத்தியமில்லை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நுகரப்பட்டு வருவது இதற்கு முன்னர் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்கள் என்றும் அந்த எரிபொருள் இருப்புக்கள் தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ச்சுனா எம்.பி மீது நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |