மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பு! கனடாவின் மெகா திட்டம்
அடுத்த மூன்று ஆண்டுகளில், சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வது கனடாவின் திட்டமென கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆண்டொன்றிற்கு 500,000 புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வரவேற்பதாக கனடா பெடரல் அரசு அறிவித்திருந்தது.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், புலம்பெயர்ந்தோர் தேவை தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.
கனடாவின் திட்டம்

வெளிநாடுகளில் வேலை இல்லாமல் கஷ்டப்படும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தம் நாட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதா கனடாவின் விருப்பம்?
கனடாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையோ அதற்கு இணையாக இல்லை.
ஆகவே, கனடா வளர்ச்சி அடைய வேண்டுமானால், அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. கனடாவில் அதற்கு போதுமான ஆட்கள் இல்லை.
இதனால் தான், மக்கள் தொகையானாலும் சரி, பொருளாதாரமானாலும் சரி, கனடாவின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோர் தேவை என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை ஆகும்.
புலம்பெயர்ந்தோர் வரவேற்பு

ஆகவேதான், பொருளாதார புலம்பெயர்ந்தோர் அதிக அளவில் வரவேற்கப்படுகிறார்கள், அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுகிறார்கள்.
அதே நேரத்தில், குடும்ப இணைப்பு ( family reunification) திட்டத்தின் கீழ் குறைவானவர்களே வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.