சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..!

Narendra Modi Justin Trudeau India Canada
By Kathirpriya Sep 22, 2023 12:20 PM GMT
Report

கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கனடாவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதன் விளைவாக இன்று இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாரியளவு விரிசல் உருவாகியிருக்கிறது.

காலிஸ்தான் அமைப்பின் தலைவரின் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

விசா வழங்க தடை

மேலும் இந்த விடயத்தின் அடுத்த கட்டமாக கனடாவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் ஐ கனேடிய அரசு நாட்டை விட்டு வெளியேற்றியதும் அதற்கு பதிலடியாக இந்தியாவின் கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறும் படி இந்திய அரசு உத்தரவிட்டதுமாக பிரச்சினை வளர்முகம் கண்டது.

சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..! | Canada Minister Invite India To Work Together

அத்துடன் நின்றுவிடாமல், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை உத்தரவினையும் பிறப்பித்திருந்தது இது கனடா இந்தியா இடையேயான உறவினை கடுமையாக பாதிக்கப்படையச் செய்துள்ளது.

இதற்கிடையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

 இணைந்து பணியாற்ற

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..! | Canada Minister Invite India To Work Together

"இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன், அப்போது என் கவலைகளை பகிர்ந்துகொண்டேன், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.

"மேலும் இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு, நாம் உலகெங்கிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு, நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை, இந்த விடயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025