கனேடிய இராணுவத்தின் உயரிய விருதை பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்
கனடாவின் உயரிய இராணுவ கௌரவங்களில் ஒன்றான “Order of Military Merit (M.M.M.)” விருதை ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் பெற்றுள்ளார்.
இதன்மூலம், இவ்விருதை பெற்ற முதல் இலங்கைத் தமிழராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
முப்பது ஆண்டு கால பணி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணத்திற்கு, கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கனடாவில் தஞ்சம் அடைந்த வாகீசன் மதியாபரணம், அந்நாட்டின் இராணுவத்தில் முப்பது ஆண்டுகளாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அவரின் நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணி சாதனைகளை மதித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
உயரிய மரியாதை
விருதைப் பெற்றபின் தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட வாகீசன் மதியாபரணம் கூறியதாவது, “இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் வாழ்நாள் கனவின் நிறைவேற்றம்.

ஏதிலியாக வந்த ஒரு தமிழ் இளைஞன் கனடா என்ற தேசத்திற்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமை,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அவரின் சாதனை, கனடாவில் வாழும் தமிழ் சமூகத்திற்கும், உலகத் தமிழர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |