கனடாவில் பெண்ணின் வாழ்க்கையையே மாற்றிய அதிஷ்டம் -லொட்டரியில் கிடைத்த 375 கோடி
கனடா நாட்டைச் சேர்ந்தவர் கமிலியா. மார்க்கெட் துறையில் பணிபுரிந்து வரும் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
இதனையடுத்து வாங்கிய லொட்டரிக்கு பரிசு ஏதும் கிடைத்து விட்டதா என்பதை பார்க்காமலே கமிலியா விட்டு விட்டதாக தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் அண்மையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோல் நிரப்புவதற்காக சென்றிருந்த கமிலியா, எதேச்சையாக தான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என்பதையும் பரிசோதித்து பார்த்துள்ளார்.
அப்படி இருக்கையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்திருப்பதை அறிந்து உற்சாகத்தில் திளைத்து போய் உள்ளார்.
அது மட்டுமல்லாமல் சுமார் 60 மில்லியன் கனேடியன் டொலர்களை இதில் பரிசாக வென்றுள்ளார் அவர். இது இந்திய மதிப்பில் சுமார் 375 கோடி ரூபாய் ஆகும்.
வேலையிலிருந்து விலக முடிவு
இவ்வளவு பெரிய பரிசு தொகை தனக்கு லொட்டரி மூலம் கிடைத்துள்ளதால் தான் பார்த்து வரும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்கி பல பேருக்கு வேலை கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பயன்படும் வகையிலும் பணத்தை செலவழிக்க போவதாகவும் அவர் உற்சாகத்தில் தெரிவித்துள்ளார்.
சிலருக்கு வாழ்க்கையில் எந்த நேரம் அதிர்ஷ்டம் நிகழும் என காத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒருவர் தனக்கு அதிர்ஷ்டம் அடித்தது தெரியாமல் இரண்டு மாதங்களாக இருந்த விஷயமும் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.