இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு தாக்கல்
இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க நேற்றும் இன்று அதிகாலையும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் பூவரசங்குளம் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
சுகாதாரமற்ற முறை
இதன்போது சுகாதாரமற்ற முறையி்ல் இயங்கிவந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தாரால் நடாத்தப்படும் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மற்றும் வெதுப்பக உணவுகளை விறாபனை செய்யும் முச்சக்கர வண்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |