“வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அடாத்தான ஆக்கிரமிப்பு” சுமந்திரன் வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலுள்ள கேவில் பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் வகையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் செயற்படக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்( M.A. Sumanthiran) கூறினார்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்பின் கருத்து வெளியிட்ட அவர், வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலுள்ள கேவில் பகுதியில் 196 சதுர கிலோமீட்டரை தேசிய பூங்கா எனும் பெயரில் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் பயிர் செய்கை மேற்கொண்டு வந்தவர்கள் உள் நுழைவதற்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் தடைவிதித்துள்ளதுடன், சில நெல் வயல்கள் ஏற்கனவே விதைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 20 மணி நேரம் முன்