11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட11 அறிக்கையிடல் நிறுவனங்களுக்கு மொத்தம் 1.46 கோடி ரூபாய் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளை மீறியமைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைக் தடுப்பதற்கான இலங்கையின் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயற்படும் நிதி உளவறிதல் பிரிவு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலப்பகுதியில் இந்த சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் இந்த அபராதங்களை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கி உறுதி
குறிப்பிட்ட நிறுவனங்களில் கண்டறியப்பட்ட விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையிலேயே இந்த அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அபராதமாக வசூலிக்கப்பட்ட அனைத்துத் தொகையும், திரட்டிய நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
அறிக்கையிடல் நிறுவனங்களிடையே சட்ட இணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதியியல் அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்