தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் போர் நிறுத்தம் முறியும்! ஈரான் கடும் எச்சரிக்கை
போர் நிறுத்தத்தை மீறுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, பல்வேறு ஈரானிய அதிகாரிகள், பொதுவெளியிலும் பாதுகாப்புப் படையினர்கள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
லெபனான் எல்லை மீதான தாக்குதல்கள், ஈரானிய கண்ணோட்டத்தில், போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகக் கருதப்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் வகையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, லெபனான் முனை உட்பட, பிராந்தியம் முழுவதும் இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்ட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தயார் நிலையில் அமெரிக்க படைகள்...! போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
ஈரானுக்குள் புகுந்த ட்ரோன்கள்
இந்நிலையில் நேற்று மத்திய ஈரானில் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை மேலும் ஒரு மீறலாக ஈரான் சுட்டிக்காட்டுகிறது.

தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், இந்த செயல்முறையிலிருந்து முழுமையாக விலகக்கூடும் என்று ஈரான் அதிகாரிகள் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
மேலும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள நிலைமை, சிக்கலை மேலும் ஒரு படி அதிகரிக்கிறது.
எரிசக்தி சந்தையில் அதன் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து, தெஹ்ரான் அந்த நீரிணையை ஒரு பேரம்பேசும் புள்ளியாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது.
கப்பல்கள் மீது ஈரான் சுங்க வரி
அவ்வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் சுங்க வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே சிக்கலான ஒரு சூழ்நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த முக்கியப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டை ஒரு வெற்றியின் அடையாளமாகக் காட்ட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய தற்போது அனைவரின் கவனமும் இஸ்லாமாபாத் பக்கம் திரும்பியுள்ளது.
அங்கு ஈரானிய தூதுக்குழுவினர் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இன்னும் மிகவும் நிலையற்றதாக உள்ள இந்தச் சூழலிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி, அங்கு ஒரு இராஜதந்திரத் தீர்வு காண்பது மட்டுமேயாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |