மின்சார சபையின் தலைவர் பதவி விலகல் - அரசியல் அழுத்தம் காரணமா..!
இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய (Tilak Siyambalapitiya) தனது பதவிவிலகல் கடிதத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
குறித்த விடயத்தை தென்னிலங்கை ஊடகம் தொடர்பு கொண்டபோது சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மின்சாரக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் அரசியல் தலையீடு காரணமாக அவர் தனது பதவியிலிருந்த விலக செய்ய முடிவு செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்சாரக் கட்டண திருத்தம்
நாட்டின் மின்சாரக் கட்டணத்தை 25 முதல் 35 சதவீதம் வரை அதிகரிப்பது குறித்து இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board (CEB)) பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சபை சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட பணியாளர் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற நிர்வாகக் குழுவை வழிநடத்துவதற்கு முடிக்க வேண்டிய இரண்டு படிகளில் ஒன்று மின்சார உற்பத்தி செலவை மீட்டெடுக்கக்கூடிய ஒரு கட்டண முறையை அறிமுகப்படுத்துவதாகும்.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையமும் இலங்கை மின்சார சபையும் ஒப்புக் கொண்ட சூத்திரத்தின்படி மின்சாரக் கட்டணத்தைத் திருத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது தயாரிக்கப்பட்ட பிறகு பொதுப் பயன்பாட்டு ஆணையத்தால் இந்த திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 15 மணி நேரம் முன்
