லால் காந்தவை தாக்க மைக் டைசனாக மாறிய சாமர சம்பத்!
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஒரு பொது கூட்டத்தில் அமைச்சர் கே.டி. லால்காந்தவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமைச்சர் லால்காந்த கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு பதிலளித்த அவர், “நீங்கள் புரூஸ் லீ என்றால், நான் மைக் டைசன். இரண்டு குத்துகள் கொடுத்தால் தரையில் விழுவீர்கள்” என்று கூறியுள்ளார்.
லால்காந்த தன்னை மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் ப்ரூஸ் லீயுடன் ஒப்பிட்டதாக கூறி, அதற்கு பதிலாகவே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
14 நீதிமன்ற வழக்குகள்
தொடர்ந்து பேசிய தசநாயக்க, 159 தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்கள் குறித்து மௌனமாக இருப்பதாகவும், அவர்கள் மக்களின் பிரச்சினைகளை பேசாமல் கல் சிலைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தனக்கு எதிராக தற்போது 14 நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த சாமர, சமீபத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், உயர் நீதிமன்றம் மற்றும் பதுளை நீதாவன் நீதிமன்றம் ஆகியவற்றில் கூடுதல் விசாரணைகள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சட்டச் சவால்களுக்கிடையிலும், மக்களுக்காக குரல் கொடுப்பதைத் தொடருவேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |