டித்வா புயல் பேரழிவு : இலங்கை -தமிழ்நாட்டை ஒப்பிடும் முன்னாள் அமைச்சர்
டித்வா புயல் இந்தியாவில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும், இலங்கையை விட பல மடங்கு மக்கள்தொகை கொண்ட அங்கு மூன்று பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சூறாவளி தமிழ்நாட்டில் சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு என்று அவர் கூறுகிறார்.
இந்திய, தமிழக அரசுகளின் முன்கூட்டிய செயற்பாடு
இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது, இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசாங்கமும் புயலை எதிர்கொள்ள மக்களுக்கு முன்கூடிடடியே தெரிவித்தன் மூலம் எவ்வளவு பொறுப்புடன் முன்கூட்டியே தயாராக உள்ளன என்பது தெளிவாகிறது என்று முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள்தொகையுடன், இந்த நாட்டில் உயிர் இழப்பு 300ஐத் தாண்டியுள்ளது.
மேலும் இந்த சூழலில், மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒரு அரசாங்கம் இருந்ததால் இந்தியா தனது மக்களின் உயிரைப் பாதுகாக்க முடிந்தது என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்துகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |