சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்! வைகோ

Tamils Sri Lanka
By pavan Feb 29, 2024 07:30 AM GMT
Report

சாந்தன் மிக நல்ல எழுத்தாளர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். தன் தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதையே இறுதி ஆசையாகக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய தாயார் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் தமிழகத்தில் நேற்று காலமனார்.

இந்தநிலையில், அவர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்!

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்!

நல்ல எழுத்தாளர்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், சாந்தனுக்கு திருமணம் ஆகவில்லை. 55 வயதாகின்றது. 32 ஆண்டுகள் தமிழ்நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் வாடி வதங்கியவர். நல்ல எழுத்தாளர். நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கின்றார். தலை சிறந்த எழுத்தாளர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஈழத்திலே பிறந்து, ஈழம் மலர்வதற்காக இந்த மண்ணுக்கு வந்து, இங்கு சித்திரவதைகளை கொடிய இருட் சிறையிலே அனுபவித்து கடைசியில் மடிந்து போனார்.

சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்! வைகோ | Chandan Very Good Writer Ltte Leader Prabhakaran

எனது தாயாரிடத்திலே என்னை அனுப்பி விடுங்கள். நான் தாயாரைப் பார்க்க வேண்டும் என்றுதான் தனது கடைசி ஆசையைச் சொன்னார். இன்னும் இவருடன் சேர்த்து வெளியில் வந்த ரொபர்ட் பாயஸ், முருகன் உள்ளிட்டவர்களையும் அவர்கள் எங்கு போக ஆசைப்படுகின்றார்களோ அங்கு அனுப்பி வையுங்கள்.

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள்

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள்

ஈழ விடுதலைப் போராட்டம்

அவர்களோடு வெளியில் வந்த பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. வாழ்க்கையின் வசந்தம் எதனையும் அவர்கள் பார்க்கவில்லை.

ஆனால், அவர்களது உள்ளத்தில் தலைவர் இருக்கின்றார். தமிழீழம் இவர்களது நெஞ்சுக்குள் இரத்தக்கறை படிந்த கோடுகளால் வரையப்பட்டிருக்கின்றது. அவர்களுடைய தியாகம் ஒப்பற்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். போராடினார்கள்.

சாந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்! வைகோ | Chandan Very Good Writer Ltte Leader Prabhakaran

ஆனால் இந்திய அரசும், உலக வல்லரசுகளும் இணைந்து ஆயுதங்களைக் கொடுத்து எவராலும் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது படையைத் தோற்கடித்தார்கள். இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள்.

சாந்தன் தனது ஊருக்கு போக வேண்டும், தாயாரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். இப்போது அவருடைய தாயார் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பாரோ என தனது வேதனையை வெளியிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023