சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள்

Jaffna Rajiv Gandhi Sri Lanka Chennai India
By Kathirpriya Feb 29, 2024 05:35 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

என் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் பார்க்க வருவது உசிதமாக இருக்கும், என்ற கோரிக்கையை, உயிரிழந்த சாந்தனின் சகோதரர் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் அண்மையில் விடுதலையாகி உடல்நலக் குறைவால் நேற்று (28) தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் சகோதரரே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் முகநூலில் இட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது,

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்: வலியுறுத்தும் தமிழீழ அரசாங்கம்

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்: வலியுறுத்தும் தமிழீழ அரசாங்கம்

நேரில் வர விரும்புபவர்கள்

“கடந்த இந்த ஒன்றரை வருட காலமாக போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை, இந்தச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகின்றது.

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள் | Don T Try To Meet Shantan S Mother Santhan Dies

அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கிறேன், அவர் யாரையும் சந்திக்கவில்லை யாருடனும் பேசவில்லை என யாரும் கோபிக்க வேண்டாம், நேரில் வர விரும்புபவர்களும் 2 நாட்களின் பின்னர் வர முடியுமா...” என்று அவர் தனது கோரிக்கையினை விடுத்துள்ளார்.

மேலும், என் தாயின் நிலை இனிமேலாவது எந்த தாய்க்கும் வராமலிருக்கட்டும் எனவும் சாந்தனின் சகோதரர் உருக்கமாக வேண்டிக்கொண்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உள்ளிட்டவர்கள் திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

சாந்தன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அங்கஜன் எம்.பி !

சாந்தன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அங்கஜன் எம்.பி !

தீவிர சிகிச்சை

இந்நிலையில், சாந்தனின் உடல் நிலை சீரில்லாமல்போன நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள் | Don T Try To Meet Shantan S Mother Santhan Dies

இருந்தபோதிலும், அவரது உடல் நிலை தொடர்ந்தும் சீரற்ற நிலையில் இருந்ததால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு சாந்தனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், துரதிஷ்டவசமாக நேற்றையதினம் (28) அதிகாலை அவர் தமிழகத்தில் வைத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.  

‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’ : கண்ணீரை வரவழைக்கும் சாந்தனின் நெகிழ்ச்சியான வார்த்தை

‘என்னை விட்டு எங்கேயும் போய் விடாதே’ : கண்ணீரை வரவழைக்கும் சாந்தனின் நெகிழ்ச்சியான வார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்