கலிபோர்னியாவில் போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியாகோவில் உள்ள மிராமர் விமானப்படைத் தளத்திற்கு அருகே அமெரிக்க கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம் நேற்று (31.07.2026) விபத்துக்குள்ளானது.
குறித்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு முன்பே விமானி அவசரமாக வெளியே குதித்ததால் உயிர் தப்பியுள்ளார்.
அமெரிக்க கடற்படை வெளியிட்ட தகவலின்படி, விமானி உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் என கூறப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளான போர் விமானம்
இந்த நிலையில் நேரில் விபத்தை கண்ட வேட் லாட் என்பவர், இரண்டு போர் விமானங்கள் தரையிறங்க முயன்றபோது, முதலாவது பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், இரண்டாவது திடீரென வேகத்தை இழந்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்தபோது விமானி வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் அந்த விமானம் ஓடுபாதை அருகே தரையில் மோதி வெடித்துச் சிதறியதாக மேலும் அவர் கூறினார்.
F-35B என்பது குறுகிய தூரத்தில் புறப்பட்டு செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். ஒரு F-35B விமானத்தின் மதிப்பு சுமார் 109 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
உயிர்தப்பிய விமானி
பாதுகாப்பு நிபுணர்கள் கூற்றுப்படி, 'F-35 ரக விமானங்கள் உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு சேவையில் இணைக்கப்பட்டதிலிருந்து இந்த வகை விமானங்களில் ஏற்பட்ட விபத்துகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.
மேலும், இதற்கு முன் நிகழ்ந்த பெரும்பாலான F-35 விபத்துகளிலும் விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்'. என கூறி உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |