வெளிநாடொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (31) மாலை 7:46 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் சுமார் 3 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் நேபிள்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் மக்களுக்கு உதவவோ அல்லது அவர்களை மீட்கவோ தங்களது குழுவினருக்கு உடனடியாக எந்த கோரிக்கைகளும் வரவில்லை என்று இத்தாலிய தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் தொடருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என்றும், நில அதிர்வுகள் ஏற்பட்டபோது சில பகுதிகளில் மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு நேபிள்ஸின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, மக்கள் அடர்த்தியாக வாழும் எரிமலைப் பள்ளமான கம்பி ஃபிளெக்ரேயில், சமீபத்திய ஆண்டுகளில் நில அதிர்வுகள் அதிகரித்து வருவதாகவும் இது அரசாங்கத்தின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |