ரணிலுடன் சமரசம் -வர்த்தகரின் முயற்சியை உதறி தள்ளிய சந்திரிகா
Chandrika Kumaratunga
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By Sumithiran
மீண்டும் நட்புறவை ஏற்படுத்த முயற்சி
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் மீண்டும் நட்புறவை ஏற்படுத்துவதற்கு வர்த்தகர் ஒருவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சமீபத்தில் தனது வீட்டில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொள்ள இருவரையும் இந்த தொழிலதிபர் அழைத்துள்ளார்.
இறுதி நேரத்தில் மறுத்த சந்திரிக்கா
இந்த அழைப்பை அவர்கள் முதலில் ஏற்றுக்கொண்ட போதிலும், அதில் கலந்துகொள்ள முடியாது என முன்னாள் அதிபர் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ராஜபச்சாக்களை விரட்டியடித்து நல்லாட்சி அரசை ஏற்படுத்துவதில் ரணில்- சந்திரிக்கா கூட்டு வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி