செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்: அகழ்வாராய்ச்சியின் தற்போதைய கட்டம்
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
புதிதாக அகழப்படும் குழியில் இருந்து ஒரு மண்டையோடு இன்றைய தினம் மீட்கப்பட்டது.
வலுக்கும் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் குழு பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தென்னிந்திய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த மனிதப் புதைகுழிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |






