கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள் : அதிர வைக்கும் செம்மணிப் புதைகுழி
யாழ். அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனித புதைகுழி ஆரம்பகட்ட அகழ்வின் போது இருந்து இன்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில் இருந்து வெளியே மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக்கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “யாழ். அரியாலை, சித்திப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனித புதைகுழி பரீட்ச்சாந்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ. ஆனந்தராஜா அவர்களின் மேற்பார்வையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணியானது இன்றுடன் தற்காலிகமாக நிறைவுறுத்தப்படுகிறது. இவ் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது மேலும் 45 நாட்களுக்கு நீடிக்க நீதவான் நேற்று அனுமதி அளித்திருந்தார்.
45நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு இன்று சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதவான் நீதிமன்ற நீதபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26ம் திகதி நீதான் அனுமதித்துள்ளார். குறித்த உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
