மன்னாரிற்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர்
Mannar
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: Thavaseelan





இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் செய்தார்.
இதன் போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா,மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப்.ஸிஹாரா மற்றும் சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றனர்.
மன்னார் மேல் நீதிமன்றம்
அதனைத்தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்ற கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது நீதிமன்ற செயல்பாடுகள் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி