மோடிக்கு கடிதம் எழுதுவதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்!

M K Stalin DMK Sri Lanka Narendra Modi
By Kajinthan Jan 12, 2026 01:29 PM GMT
Report

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (12.01.2026) யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் கோர விபத்து: அதிகரித்த பலி எண்ணிக்கை!

கிளிநொச்சியில் கோர விபத்து: அதிகரித்த பலி எண்ணிக்கை!

கடற்றொழிலாளர்கள்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன.

மோடிக்கு கடிதம் எழுதுவதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்! | Chief Minister Should Stop Writing Letters Harini

இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் பாரத பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

பாரத பிரதமருக்கு கடிதத்தினை எழுதி தொடர்ந்து அரசியல் நாடகத்தினை செய்யாதீர்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் முதலாளி வர்க்கத்தினரிடம் தான் இந்த இழுவைமடித் தொழில்கள் இருக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தான் எமது கடல் வளத்தை அழிக்கின்றனர். முதலமைச்சர் நினைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து இழுவைமடித் தொழில்களையும் நிறுத்தலாம்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ஈரான்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ஈரான்!

முதலமைச்சர்

நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினாலேயே எமது மனம் வேதனை அடைகிறது. தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற தன்னுடைய கடற்றொழிலாளர்களை நான்கு வருடங்களாக பதவியில் இருக்கின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தாமல் அந்த பிரச்சினையை அரசியலாக்குவது நல்லதல்ல.

மோடிக்கு கடிதம் எழுதுவதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்! | Chief Minister Should Stop Writing Letters Harini

அவர்களுடைய கடற்றொழிலாளர்கள் எங்களுடைய எல்லைக்குள் வராமல் ட்டுப்படுத்துவதே நல்ல விடயம்.

இதேவேளை, இலங்கையில் மலையகத்தில் எமது சொந்தங்கள் 200 வருடங்களுக்கு மேலாக பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய நெருக்கடியை தீர்ப்பதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடிக்கு கடிதங்களை எழுதி அரசியல் செய்யாதீர்கள்.

வடக்கு மக்களையும், மலையக மக்களையும் புறந்தள்ளி அரசியலை முன்னே கொண்டு செல்வதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

செம்மணி குறித்து கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளி சோமரத்ன வெளிப்படுத்திய தகவல்

செம்மணி குறித்து கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளி சோமரத்ன வெளிப்படுத்திய தகவல்

ஈரானை குறி வைக்கும் ட்ரம்ப்: ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பலி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஈரானை குறி வைக்கும் ட்ரம்ப்: ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பலி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026