ஆறு வயது மகனை வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தையின் நண்பர்கள் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆறு வயது பாடசாலை மாணவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் STI மற்றும் மனநல மருத்துவமனைகளில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் குழந்தையை கைவிட்டுச் சென்றுள்ளார் என்பதும், அவனது தந்தை தீவிர போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
தந்தையின் நண்பர்கள்
பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தை, போதைக்கு அடிமையான தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் குழந்தைக்கு போதைப்பொருள் கொடுத்து அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
