அனுர மீதான கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய பிள்ளையான்
பிள்ளையான் கைது செய்யப்ட்டு விளக்கமறியலில் உள்ள நிலையில் அவர் மீதான விசாரணைகளின் முடிவுகள் தொடர்பில் எவ்வித செய்திகளும் உத்தியோகபூர்வ அறிக்கைகளும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் ஒருபகுதியாக நேற்றையதினம் அவர் மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
ஆனால் நீதிமன்றில் அவரது வழக்கு முடிவடைந்த நிலையில் வெளியே வந்த அவர் சிறைபேருந்தில் இருந்தபடியே தன்மீதான குற்றச்சாட்டும் அனுரவின் வாய்போன்றதே என தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தமை தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தான் அச்சப்படவில்லை என்பதை வெளியில் காட்டிக் கொள்வதற்கு கூட இருக்கலாம்.
பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் உள்ள வித்தியாசம், பிள்ளையான் ஒரு அரசியல்வாதி . அரசியல்வாதிகள் எப்போதும் தாம் குற்றமற்றவர்கள் என்றே சொல்லிக்கொண்ருப்பார்கள்
இவ்வாறு ஐபிசி களம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா. தற்போதைய பிள்ளையான், சுரேஷ்சாலே மீதான விசாரணை , வடக்கு ஆளுநரால் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவி பறிப்புகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடரும் காணொளியில்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்