வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் பிள்ளைகள் : கனக ஹேரத் சுட்டிக்காட்டு

Kanaka Herath Sri Lanka Strike Sri Lanka Education
By Sathangani Jul 09, 2024 05:24 AM GMT
Report

நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டிலிருந்து, நமது அமைச்சினால் பாரிய அளவில் பல்வேறு கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் செயற்படுத்தப்பட்டன.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்: அதிகரிக்கும் சர்ச்சை

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்: அதிகரிக்கும் சர்ச்சை

டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம்

நாடாளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில சட்டமூலங்களை முன்வைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலக வங்கியின் ஆதரவுடன், 2020-2030 டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் வெளியிடப்பட்டது. தற்போதைய 03 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.

digital economy-sri lanka

இன்று (09) நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தை 28 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்த எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நுகர்வோரைப் பாதுகாப்பதுடன் தொலைபேசி நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியை நியாயமான போட்டியாக மாற்றுவது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

முன்பு, இந்த சட்டம் தொலைத்தொடர்பு கட்டமைப்பு அனுமதிப்பத்திரத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருத்தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறிமுறையும் மாற்றம் அடையும்.

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு 

மேலும், எதிர்காலத்தில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வசதிகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடல்வழி கேபிள் சேவைக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

இந்த ஆண்டு தொழில்நுட்ப மேம்பாட்டுச் சட்டத்தை முன்வைக்கவும் எதிர்பார்க்கின்றோம். மேலும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆணைக் குழுவை நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் பிள்ளைகள் : கனக ஹேரத் சுட்டிக்காட்டு | Children Deprived Of Education Due To Strikes

அவ்வாறு செய்வதன் மூலம், நாட்டின் அனைத்து அபிவிருத்தி மற்றும் புத்தாக்கங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். ஆராய்ச்சி, வணிகமயமாக்கப்படுவதுடன் பரிநதுரைகளை வழங்குவதும் இதன் மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும் தற்போதைய தொழில்சார் நடவடிக்கைகளின்படி அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு கோரப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு வருடத்திற்கு சுமார் 280 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

நாட்டில் அரச சேவைகள் முடங்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் அரச சேவைகள் முடங்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த செலவுகளை எவ்வாறு ஈடுகட்டுவது என்பதை எதிர்க்கட்சி தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், தேர்தல் நெருங்கும் வேளையில் அசாதாரண வகையில் போராட்டங்களை முன்னெடுத்தமையினால், பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் பிள்ளைகள் : கனக ஹேரத் சுட்டிக்காட்டு | Children Deprived Of Education Due To Strikes

இறுதியில் சாதாரண பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக இவ்வருடம் 11 பில்லியன் ரூபா வழங்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் போராட்டங்கள் மூலம் மக்களின் நிவாரண வாழ்வாதாரத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றனரா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க வேண்டும்.“ என தெரிவித்துள்ளார்.

கொழும்பு சென்று மீண்டும் வருவேன்: மக்கள் மத்தியில் வைத்தியர் அர்ச்சுனா உறுதி

கொழும்பு சென்று மீண்டும் வருவேன்: மக்கள் மத்தியில் வைத்தியர் அர்ச்சுனா உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025