சிறிலங்கா காவல்துறையினருக்கு சீனா வழங்கிய நன்கொடை
Sri Lanka Police
Ranil Wickremesinghe
Sri Lanka
China
By pavan
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை காவல்துறை திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த காவல்துறை சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக காவல்துறை திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று (15) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன்னினால் அதிபர் முன்னிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் டிரான் அலஸிடம் கையளிக்கப்பட்டது.
கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.



4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்