ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டிற்கு சீனா ஆயுதங்களை வழங்குவதாக வெளிவரும் செய்திகள் குறித்து ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு, சீனா அத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்று ஷி ஜின்பிங் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் எழுதிய கடிதம்
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பின்னணியில், மேற்படி கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

ஈரானுக்கு சீனா வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தக் கோரி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு, "நிச்சயமாகத் தாங்கள் அப்படிச் செய்யவில்லை" என ஷி ஜின்பிங் பதில் அளித்துள்ளதாகத் தெரியருகிறது.
புதிய ஆயுதத் தளவாடங்கள்
இதன்படி, சீன ஜனாதிபதியை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் தமக்கு ஒரு அழகான கடிதத்தை எழுதியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த சில வாரங்களில் ஈரானுக்குப் புதிய ஆயுதத் தளவாடங்களை சீனா அனுப்பக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |