சீன கப்பல் விவகாரத்தில் ராஜதந்திர சிக்கல் - பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும்!

Lankasri Geneva Dr Harsha De Silva Tamil diaspora China Ship In Sri Lanka
By Kalaimathy Aug 16, 2022 07:58 AM GMT
Report

சிறிலங்காவிற்குள் பிரவேசிக்க சீன கப்பல் இடமளித்தமை சம்பந்தமாக மிகப் பெரிய ராஜதந்திர சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த சிக்கல் ஊடாக சர்வதேச தொடர்புகள் அழிந்து போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“எதிர்காலத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும். ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை விடயத்திலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு மிக முக்கியம்

சீன கப்பல் விவகாரத்தில் ராஜதந்திர சிக்கல் - பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும்! | China Ship Yuan Wang 5 Hambantota Port Sri Lanka

இதுதான் சிறிலங்கா சர்வதேச தொடர்புகள் விடயத்தில் அடைந்துள்ள நிலைமை. சீன கப்பல் விவகாரம் தொடர்பான பிரச்சினையை முன்னதாக தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

மங்கள் சமரவீர வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய போது நானும் வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக இரண்டு ஆண்டுகள் கடமையாற்றினேன். இதனால், எனக்கு வெளிவிவகார ராஜதந்திர விடயங்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது தெரியும்.

முடிவுகளை எடுக்கும் முன்னரும் அவற்றை திரும்ப பெறும் முன்னரும் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். எமக்கு இந்தியா மிக முக்கியமானது. சீனாவும் மிகவும் முக்கியமானது.

இந்தியா மற்றும் சீனாவுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டால் இறுதியில் எமக்கு என்ன நடக்கும். இந்த தீர்மானங்களை எடுத்தவர்கள் யார்? தீர்மானங்களை மாற்றியது யார்? இந்த தீர்மானங்களை மீண்டும் மாற்றியது யார்? எமது வெளிவிவகார தொடர்புகளை முற்றாக சீர்குலைத்துள்ளனர்.

விரைவில் ஜெனிவாவில் அடுத்த பிரச்சினை ஏற்படும்

சீன கப்பல் விவகாரத்தில் ராஜதந்திர சிக்கல் - பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும்! | China Ship Yuan Wang 5 Hambantota Port Sri Lanka

வெளிவிவகார அமைச்சு யாருடைய பொறுப்பின் கீழ் இருந்தது. அமைச்சின் செயலாளராக பணியாற்றியது யார்? கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகே வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றினார்.

கடற்படை தளபதிகளை கொண்டு வெளிவிவகார அமைச்சை நடத்த முடியுமா? நாடுகளின் தூதுவர்களாக யாரை நியமித்துள்ளனர். விரைவில் ஜெனிவாவில் அடுத்த பிரச்சினை ஏற்படும்.

சீனாவின் இந்த கப்பல் பிரச்சினை மாத்திரமல்ல, ஜெனிவாவில் மனித உரிமை தொடர்பான பிரச்சினை வரும். சர்வதேச உறவுகளுக்கான பலங்களை உடைத்தெறிந்துள்ளனர்.

இந்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்துக்கொண்டிருக்க முடியும். தற்போது இந்த பிரச்சினை தீர்த்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாடுகளில் ஒன்றுடனான இலங்கையின் உறவு பாதிக்கப்படும்.

நாட்டுக்கு நாடு தப்பிச்செல்லும் கோட்டாபய

சீன கப்பல் விவகாரத்தில் ராஜதந்திர சிக்கல் - பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும்! | China Ship Yuan Wang 5 Hambantota Port Sri Lanka

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறி வந்தவர்கள், நாட்டின் முழு பாதுகாப்பையும் பாதிக்க செய்துள்ளனர். எங்கே தேசிய பாதுகாப்பு? நாட்டு மக்களுக்கு உண்ணவும் வாழவும் முடியாது என்றால் எங்கே தேசிய பாதுகாப்பு.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதாக கூறி வந்தவர் நாட்டில் இருந்து வெளியேறி சென்று விட்டார். தற்போது அவருக்கு பாதுகாப்பு இல்லை. நாட்டுக்கு நாடு தப்பிச் சென்றுள்ளார். முன்னாள் அதிபர் பற்றி நான் இப்படி கூறுவது தொடர்பில் மன்னியுங்கள்.

தேசிய பாதுகாப்பு அல்ல, அவரது பாதுகாப்பை கூட அவரால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று இனவாதத்தை முன்வைக்க வேண்டாம்.

இனவாதத்தை முன்வைத்தே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதாக கூறினர். இதன் காரணமாகவே நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் ஒரே நாட்டினர் என்று ஏற்கவில்லை.

புலம்பெயர்ந்தவர்கள் என்றால், யார்?

சீன கப்பல் விவகாரத்தில் ராஜதந்திர சிக்கல் - பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும்! | China Ship Yuan Wang 5 Hambantota Port Sri Lanka

தொடர்ந்தும் இந்த குழியில் விழ வேண்டும் என்று கூறுகிறீர்கள். தமிழர்களா, முஸ்லிம்களா, சிங்களவர்களா என்று கூறிக்கொண்டு இருக்க தேவையில்லை. புலம்பெயர்ந்தவர்கள் என்பது புலம்பெயர்ந்தவர்கள்.

சாதாரணமாக புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறினால், புலம்பெயர் தமிழர்கள் என்று கூறுகின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் என்றால், யார்? ஏற்கனவே எமது நாட்டில் வாழ்ந்த பிரஜைகள் வெளிநாடுகளில் சென்று வாழ்ந்து வருகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர்ந்தவர் இல்லையா? கோட்டாபய ராஜபக்சவின் மனைவி, பிள்ளைகள் புலம்யபெயர்ந்தவர்கள் இல்லையா? அவர்களும் புலம்பெயர்ந்தவர்களே. காரணம் அவர்கள் அமெரிக்கர்கள்.

இனவாத ரீதியாக இந்த பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளில் எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என்பதை நான் இன்னும் தேடியறியவில்லை.

முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நோக்கி தற்போதாவது செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” எனவும் ஹர்ச டி சில்வா கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை தெற்கு, Scarborough, Canada

31 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Montreuil, France

27 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

களுவாஞ்சிக்குடி, Hurdegaryp, Netherlands

31 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை கிழக்கு

12 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, கல்வியங்காடு

29 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, மன்னார், வவுனியா

27 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, India, Markham, Canada

27 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024