மீண்டும் வலுவான நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் சீனா!
சிறிலங்காவிற்கான சீன தூதுவருக்கும் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும், இடையில் விசேட சந்திப்பொன்று இடம்ாற்றள்ளது.
இந்த விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு சீனா உதவிகளை வழங்குவதோடு சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்கள் எனவும் சிறிலங்காவிற்கான சீன தூதுவர் உறுதியளித்துள்ளார்.
மிக விரைவில் இயல்பு நிலைக்கு

அதுமட்டுமன்றி இந்த சந்திப்பின் போது சிறிலங்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் மிக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தான் நம்புவதாகவும் சீன தூதுவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.