விரைவில் இலங்கை மீளும்! சீனா வெளியிட்ட அறிவிப்பு
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளிலிருந்து இலங்கை விரைவில் மீட்சியடையும் என்று சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது,
இலங்கையானது நிச்சயமாக கூடிய விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும்.
2014ஆம் ஆண்டு அரச தலைவர் ஷி ஜின் பிங்கின் இலங்கைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரச விஜயமானது இருதரப்பு நட்புறவு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்ததுடன், தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது.
இதேவேளை, இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததில் இருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றன. இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தனது சக்திக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்கி வருகின்றது.
எதிர்காலத்திலும் அதனைத் தொடரும் என்றார். அண்மையில், அரச சபை உறுப்பினரும் சீன வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடினார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
You May Like This