அநுர அரசுக்கு சீனாவிடமிருந்து வந்த ‘அட்வைஸ்’
இலங்கையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகள் கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஜேவிபி குழுவின் சீனா விஜயம் குறித்து விவாதிக்கும் போது ரில்வின் சில்வா இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். சுற்றுப்பயணத்தின் போது, சில்வா தலைமையிலான குழு, மூத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியது.
மாற்றங்களைச் செயல்படுத்த சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்
“கருதப்பட்ட மாற்றங்களைச் செயல்படுத்த சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும் என்றும், அதாவது இன்னும் மூன்று முதல் நான்கு தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமெனவும் அவர்கள் (சிபிசி அதிகாரிகள்) கூறினர். ஐந்து ஆண்டுகளுக்குள் நாம் கற்பனை செய்யும் மாற்றங்களைச் செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். சீனாவை மாற்றுவதற்கு அவர்களுக்கு சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் ஆனது, ”என்று சில்வா பேட்டியில் கூறினார்.
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் நீண்டகால நிர்வாகம், கட்சி மேம்பாடு மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியைப் போல செயல்பட முடியாது
“நாங்கள் இனி ஒரு எதிர்க்கட்சியைப் போல செயல்பட முடியாது. நாம் இன்னும் திறமையாகவும் விரைவாகவும் செயல்பட வேண்டும். நிர்வாகம், மேலாண்மை மற்றும் பொருளாதாரம் பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன, அவை எங்களுக்கு உதவும் என்று அவர்கள் கூறியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
சில்வாவின் கூற்றுப்படி, CPC உடனான அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சாத்தியமான கூட்டாண்மைகளையும் தூதுக்குழு ஆராய்ந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா
