போரின் உச்சத்தில் ஐ.நா. பொதுச் செயலாளரை ஏய்த்த மகிந்தவின் ராஜதந்திரம்
இறுதி போரின் இறுதித் தருவாய் உக்கிரமடைந்திருந்த போது பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்தில் போரை நிறுத்தி மக்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் பெரும் முயற்சி எடுத்தது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனினும், அச்சந்தர்ப்பத்தில் ஐ.நாவின் பொதுச் செயலாளராக இருந்த பான் கீ மூன் இலங்கைக்கு வருவதற்கு தீர்மானித்திருந்த போது அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுக் சென்றதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச சமூகம்
“தமிழ் மக்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் பெரும் முயற்சி எடுத்தது. இதன்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவை சந்திக்க பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் வருகைத்தந்தனர்.
எனினும், அப்போது வந்த வெளிநாட்டு அமைச்சர்களை எம்பிலிபிட்டியவுக்கு அழைத்துச் சென்றே மகிந்த பேசியிருந்தார். அவ்வளவு அழுத்தங்கள் வந்தன.
இந்த பின்னணியில், ஐ.நாவின் பொதுச் செயலாளராக இருந்த பான் கீ மூன் இலங்கைக்கு வருவதற்கு தீர்மானித்திருந்த போது மகிந்த வெளிநாட்டுக் சென்றார்.
ஒரு நாட்டின் அரசாங்கத்தின் தலைவர் இல்லையென்றார் ஐ.நாவின் பொதுச் செயலாளர் வர மாட்டார் என நினைத்து திட்டம் தீட்டியே மகிந்த வெளிநாடு சென்றார்.
“மகிந்த அன்று அவ்வாறே தனது ராஜதந்திரங்களை பாவித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
சுமுகமாக வாழும் வாழ்க்கை
இன்று நாம் சுமுகமாக வாழும் வாழ்க்கை அவர் கொடுத்தது. நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாக செயற்பட வேண்டும். யுத்தத்தில் மூப்படைகளையும் ஒன்றிணைத்து செயற்பட வைத்தார். அவ்வாறு யாராலும் செய்ய முடியாது.
அதன் பிரதிபலனே விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். ஆகையால் தமிழ் டயஸ்போராக்களுக்கு ஒரு தாகம் இருக்கிறது.
கோட்டபய மற்றும் மகிந்த ராஜபகசவை வலுவிழக்க செய்ய வேண்டும் என்ற என்னம் அது. அவை நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அவர்களுடன் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டை நாம் நேசிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
