தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று முதல் வெடிக்கவுள்ள போராட்டம்!
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் 'நீதியின் ஓலம்' எனும் தலைப்பில் இன்று முதல் (14) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணிகள் கடந்த சனிக்கிழமையுடன் (8) 100 நாட்களை எட்டியிருப்பதுடன், அந்த மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி
இந்தநிலையில் குறிப்பாக படுகொலை செய்யப்பட்டு, செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுமே 'நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதல் (14) எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செம்மணி மனிதப்புதைகுழி அவலம் குறித்தும், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதனைத்தொடர்ந்து 17 ஆம் திகதி (திங்கட்கிழமை) செம்மணி மனிதப்புதைகுழிக்கு அண்மையில் கவனயீர்ப்புப் பேராட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 5 மணி நேரம் முன்