அமெரிக்காவுடன் மோத தயார்: சீனாவின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா(America) வரி விதிக்கும் போட்டிக்கு வந்தாலும், வர்த்தகப் போருக்கு வந்தாலும் வேறு எந்த போருக்கு வந்தாலும் தான் தயார் என சீனா(China) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்பின் புதிய வரி விதிப்புக்கள் மூலமாக புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில் கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள 25 சதவீத வரிகள் நேற்று(4) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதேவேளை, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு சீனா கூடுதலாக 15 சதவீத வரியை விதித்துள்ளது.
அமெரிக்காவுடன் வர்த்தக போர்
இந்த வரி விதிப்பு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சீனாவின் சுங்க வரி ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக போர் ஏற்பட்டால் இறுதி வரை போராட சீனா தயார் என்று வெளியுறவு அமைச்சரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பென்டானில் என்ற வேதிப்பொருள் ஏற்றுமதி பிரச்சினைக்கு அமெரிக்கா தீர்வு காண விரும்பினால் பேசித் தீர்ப்பதே சரியான வழி என்றும் சீனாவுக்குச் சம அந்தஸ்து அளித்து அமெரிக்கா பேச்சு நடத்துவதே பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி என்றும் சீனா அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
