திடீரென சஜித்தை தேடிச் சென்ற சீனத்தூதுவர்
இலங்கைக்கான சீனத் தூதுவர் வி.ஜென்ஹான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று (22) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்துவம் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்கும் நட்பு ரீதியான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கும் தற்போதைய கடன் நெருக்கடியை நிர்வகிப்பதற்குத் தேவையான ஆதரவையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்த சீனத் தூதர் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.