இந்திய மாநாட்டில் சீன நிதியமைச்சர் -உறுதிப்படுத்தியது ஐ.எம்.எவ்
சீனாவின் நிதியமைச்சர் மற்றும் அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பணம் செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் நிவாரணம்
இந்தியாவில் இடம்பெறும் வட்டமேசை கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற புதிய கடன் வழங்குநர்களையும், அதே போன்று தனியார் துறையினரையும் பங்கேற்க வைக்கவுள்ளதாக ஜோர்ஜீவா கூறினாார்.
அதிக கடனில் உள்ள நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெப்ரவரி மாதத்தின்
இறுதியில் ஏனைய கடன்
வழங்குநர்கள் மற்றும்
சில கடன் வாங்கும்
நாடுகளுடன் இந்தியாவில்
வட்டமேசை கூட்டம்
இடம்பெறவுள்ள நிலையில்,
இந்தக் கூட்டத்திலேயே
சீனாவின் நிதியமைச்சரும்,
மத்திய வங்கியின் ஆளுநரும்
பங்கேற்கவுள்ளனர் என்று
ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்