மில்லியன் கணக்கான தொகையை வங்கியில் வைப்புச் செய்த பெண் கைது
Crime Branch Criminal Investigation Department
Money
By Sumithiran
பெண்ணொருவர் இரண்டு வங்கிகளில் 20.4 மில்லியன் தொகையை வைப்பு செய்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காலி, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய பெண், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.20.4 மில்லியனை வைப்பு செய்த பெண்
சந்தேக நபர் அரசு வங்கியிலும் தனியார் வங்கியிலும் என இரண்டு கணக்குகளை நடத்தி வருவதாகவும், ரூ.20.4 மில்லியனை அந்த கணக்குகளுக்கு வைப்பு செய்துள்ளதாகவும் சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் கைதான கணவன்
சந்தேகத்திற்கிடமான பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலுக்காக விளக்கமறியலில் இருப்பதாகவும், முதற்கட்ட விசாரணையில் அவர் தனது மனைவியின் பரிவர்த்தனைகளுக்குப் பின்னால் செயல்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி