நாளை வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளைய (13.05.2025) தினம் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (12.05.2025) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை எச்சரிக்கை
அதன்படி அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளாது.
2025 மே 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு [மே 12ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது.]
இன்று மாலை முதல் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு சற்று அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை
சில இடங்களில், மி.மீ. 50 டிகிரிக்கு மேல் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடி மற்றும் மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
