100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு

Nuwara Eliya Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka
By Independent Writer May 13, 2025 05:22 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

புதிய இணைப்பு

ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் விசேட விசாராணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் நான்கு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நான்காம் இணைப்பு

விபத்துக்குள்ளான பேருந்தினை மிகவும் அனுபவம் வாய்ந்த சாரதி ஒருவரே செலுத்தியதாக பேருந்திற்கு சொந்தமான கதிர்காமம் டிப்போவின் முகாமையாளர் துசித சமிந்த தெரிவித்துள்ளார்.

பேருந்து விபத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட தூர சேவை பேருந்துகள், முறையாக கட்டமைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இயக்கப்படுகின்றன. 

மேலும், இந்தப் பயணத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த சாரதி ஒருவரே நியமிக்கப்பட்டிருந்தார். அவர் மாலை 4 மணிக்கு சரியான நேரத்தில் வேலைக்கு வந்து இரவு 10.00 மணிக்கு வேலையைத் தொடங்குவார். "பகலில் வேலை இல்லை." என டிப்போவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் இணைப்பு  

நுவரெலியா - கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை இரவு பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு | Death Toll In Gerandi Ella Bus Accident

இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.

இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.


மீட்பு பிரிவினருக்கும் நன்றி

இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு | Death Toll In Gerandi Ella Bus Accident

இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி.

நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம்

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம்

பேருந்து விபத்து

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பேருந்து விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - விரையும் விசேட விசாரணைக் குழு | Death Toll In Gerandi Ella Bus Accident

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதோடு, இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கோர விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம் - வைரலாகும் புகைப்படம்

கோர விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம் - வைரலாகும் புகைப்படம்

மேலதிக நடவடிக்கை

"Clean SriLanka" திட்டத்தின் கீழ் இதற்காக ஒரு திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (11) காலை நடந்த இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளை தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதார பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடித்தனம் - கைது செய்யப்பட்ட விவசாயிகள் : ரவிகரன் எம்பி விசனம்

குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடித்தனம் - கைது செய்யப்பட்ட விவசாயிகள் : ரவிகரன் எம்பி விசனம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015