ஈரானின் 6000 இலக்குகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள 'எபிக் ஃபியூரி' இராணுவ நடவடிக்கையின் கீழ், ஈரானில் உள்ள 6,000 இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சுமார் 60 ஈரானியக் கப்பல்கள் மற்றும் 30 ஏனைய சிறிய ரகப் படகுகள் இந்தத் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரானிய இராணுவ மையங்கள், ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் பெலிஸ்டிக் ஏவுகணை மையங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் என்பனவற்றையும் இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மீது வான்வழித் தாக்குதல்
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையின் தொடக்கத்தில் வான்வழித் தாக்குதல்களின் போது ஈரானில் உள்ள ஒரு பாடசாலையைத் தற்செயலாகத் தாக்கியதற்கு அமெரிக்கப் படைகள் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க இராணுவ புலனாய்வாளர்கள் நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்றும் ஆனால் அவர்கள் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஆட்சியின் இராணுவ மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு (CENTCOM) பெப்ரவரி 28 அன்று அதிகாலை 1:15 மணிக்கு இந்த இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையில் வான், கடல் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு களங்களில் பரந்த அளவிலான அமெரிக்க இராணுவ வளங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |