யாழில் மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள்!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழில் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும் நேற்றையதினம்(12) சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி 2 கடைகளில் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டன.
சட்ட நடவடிக்கை
தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.
அல்லைப்பிட்டியில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்