ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த விமானத்தில் பெரும் களேபரம் -அவசரமாக தரையிறக்கம் (காணொளி)
ஆஸ்திரேலியாவில் நடுவானில் பயணிகள் இடையே ஏற்பட்ட மோதலால் விமானம் அவசமாக தரையிறக்கம் செய்யப்பட்டு, கிளம்பிய பின் மீண்டும் மோதிக் கொண்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கெயின்ஸ் நகரில் இருந்து வடக்கு பிரதேசத்தில் உள்ள குரூட் எய்லாண்ட் நகர் நோக்கி விமானம் ஒன்று பறந்து சென்றபோது, நடுவானில் பயணிகள் சிலர் மோதிக் கொண்டனர். இதனால், சக பயணிகள் அச்சமடைந்தனர். இதில், பெண் பயணி ஒருவர் போத்தல் ஒன்றை எடுத்து மற்றொருவர் மீது தாக்க சென்றுள்ளார். இந்த காணொளியும் வெளியானது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. குறிப்பிட்ட அந்த பெண் பயணி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
முதலாவதாக தரையிறக்கம்
அவர் விமான பயணத்தில் இருந்து நீக்கப்பட்டு, கீழே இறக்கி விடப்பட்டார். விமான ஊழியர்கள் அளித்த பாதுகாப்பு விதிகளுக்கான அறிவுறுத்தல்களை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் மோதல்
Departing Cairns today..
— Jet Ski Bandit (@fulovitboss) April 20, 2023
Just someone trying to glass someone.
More fighting amongst themselves. Complete disregard for other passengers and the plane. I wonder if there were any consequences. #VoteNO 🇦🇺 #VoiceToParliament pic.twitter.com/v5iKWbWRtM
இதன்பின் அந்த பெண்ணை விட்டு, விட்டு பிற பயணிகளுடன் விமானம் மீண்டும் பறந்தது. ஆனால், அதே பயணிகள் மீண்டும் தங்களது சண்டையை தொடர்ந்துள்ளனர். வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பில் முடிந்ததில், விமானத்தின் உள்ளே இருந்த ஜன்னல் பகுதி உடைந்தது. இதனை தொடர்ந்து, விமானம் ஆலியாங்குலா பகுதியில் தரையிறங்கியது.
பயணிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். உள்நோக்கத்துடன் பிறருக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்தல், சொத்துகளுக்கு பாதிப்பு, ஒழுங்கற்ற நடத்தை, வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 23 வயது நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதே வயதுடைய மற்றொரு பெண் மீதும் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் உள்பட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
22 வயது நபர் மீது போதை பொருள் விநியோகம், பதுக்கி வைத்தல், தடை செய்யப்பட்ட பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.