மாவீரர் நாளில் யாழில் கடையடைப்பு: விடுக்கப்பட்ட கோரிக்கை!
மாவீரர் தினம் நாளை (27.11.2025) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2 மணியுடன் மூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கடை உரிமையாளர் ஊழியர்கள் மாவீரர் நிகழ்வில் பங்கு பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சந்திப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

குறித்த கோரிக்கை நேரில் சந்தித்து எழுத்துமூலமாக முன்வைக்கப்பட்டது.
அவர்கள் இது தொடர்பில் சாதகமான வாக்குறுதிகளை தந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் நாளைய தினம் (27.11.2025) அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மஞ்சள் சிவப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட வத்தகர்களுக்கு இந்தமாதம் மாவீரர்களின் மாதம் நாளை 27 நடைபெருகின்ற உணர்வெழிச்சி மாவீரர் நாளிள் வத்தகர்கள் வாணிபங்களை மூடி ஒத்துளைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் இராசையா நளினியால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச மக்களும் உணரவோடு செயற்படுமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ராஜுகரன்
மாவீரர் வாரத்தில் குடத்தனை வடக்கில் குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணியிலிருந்த 1:00 மணிவரை இடம்பெற்றது.
முன்னதாக மாவீரர்களுக்கு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் 20 பேர் குருதிக்்கொடையளித்தனர்.
குடத்தனை வடக்கு இளைஞர்கள் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
செய்தி - எரிமலை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 10 மணி நேரம் முன்