திமுக மட்டமான அரசியல் - நடுவில் எதற்கு பிரதமர்..!! வாக்குவாதமான நேர்காணல்
திமுகவின் அரசியல் தன்மை
திராவிட முன்னேற்றக் கழகம் மட்டமான அரசியல் செய்கிறது என அரசியல் விமர்சகர் கிசோர் கே சாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே இவ்வாறு கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் சென்று 31 பல திட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் வைத்து பிரதமரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், எமது மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர்,
கிசோர் கே சாமி குற்றச்சாட்டு
“திமுக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் செய்தது. அந்த மசோதா குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்து விட்டார்.
நீங்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம் அல்லவா. எதற்கு நடுவில் பிரதமர்.
நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்கும் பிரதமரிடம் நீட் தேர்வுக்கு விலக்கு கொடுங்கள் என்றா கேட்பீர்களா? நீங்கள் சிறுபான்மையினர் வாக்குகளை பெறவும் பிரதமர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதை காட்டுவதற்காக அரசியல் செய்கிறீர்கள்” என்றார்.